ஆனால், நீங்களும் உங்க தெலுங்குப் படமும் என்று சென்னையில் செட்டிலானவர், தொடர்ச்சியாக தமிழில் நடித்து, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டார்.
ஒவ்வொரு படத்துக்கும் நாயகி தேர்வு செய்யும் போதும், நயன்தாராவின் பெயரை முதலில் எழுதி அடித்துவிட்டே அடுத்த நடிகைக்கு போனது தெலுங்கு திரையுலகம். நயன்தாரா இல்லாத வெற்றிடத்தை அவர்கள் சீக்கிரமே அறிந்து கொண்டனர். நடுவில் சிலர் நயன்தாராவை தெலுங்கில் நடிக்க அணுகிய போது, விருப்பமில்லை என்று விருப்பத்தோடு மறுத்தார். கடைசியில், நெருங்கிய நண்பர் வெங்கடேஷுக்காக அவருடன் பாபு பங்காரம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் முடிந்து டீசரும் வெளியிட்டுள்ளனர்.