சில தினங்கள் முன்பு கர்னானி தனது காரில் சென்ற போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச சைகை செய்திருக்கிறார்கள். அவர்களையும், அவர்களின் பைக் நம்பரையும் போட்டோ எடுத்துக் கொண்ட கர்னானி, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட ஆபாசப் பார்ட்டிகளை பிரபலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
ஆபாச சைகை போன்று எதுவும் செய்யாத ஒருவரையும் இதுபோல் புகைப்படம் எடுத்து, பிரபலப்படுத்தி, அவரது பெயரை சீரழித்து, கைது செய்ய வைக்க முடியும் என்பதுதான் கர்னானியின் இந்த புத்திசாலித்தனமான வழிமுறையின் ஒரே ஆபத்து என்பதும் கவனிக்கத்தக்கது.