அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் படமாகுமா?

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:18 IST)
அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
காலத்தை கடந்து நிற்கும் சொற்ப தமிழ் நாவல்களில் தண்ணீரும் 
ஒன்று. இதனை படமாக்க பலரும் முயற்சித்தனர்.


 
 
ஆனால், அவர்களுக்கெல்லாம் முன்பே அந்த நாவலை படமாக்கும் உரிமையை இயக்குனர் வஸந்த் வசப்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் அந்த உரிமை அவரிடம் உள்ளது. ஆனால், இன்றுவரை அது படமாகவில்லை. சமீபத்தில் தண்ணீர் பெயரில் ஒரு படத்தை தொடங்கினார். அது குறும்படமா, பியூச்சர் ஃபிலிமா இல்லை வேறு ஏதாவதா? இன்றுவரை பதிலில்லை.
 
இதேபோல் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நாவலின் உரிமையையும் வாங்கி வைத்துள்ளதாக தகவல் உள்ளது. 
 
வஸந்த் சார் சீக்கிரம் தண்ணீரை கண்ணுல காட்டுங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்