ஆனால், அவர்களுக்கெல்லாம் முன்பே அந்த நாவலை படமாக்கும் உரிமையை இயக்குனர் வஸந்த் வசப்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் அந்த உரிமை அவரிடம் உள்ளது. ஆனால், இன்றுவரை அது படமாகவில்லை. சமீபத்தில் தண்ணீர் பெயரில் ஒரு படத்தை தொடங்கினார். அது குறும்படமா, பியூச்சர் ஃபிலிமா இல்லை வேறு ஏதாவதா? இன்றுவரை பதிலில்லை.