ஆர்யன் கானுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விளக்கம்

சனி, 20 நவம்பர் 2021 (18:07 IST)
சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதப் பொருள் பயன்படுத்தியதாக 9 பேருடன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வரும் நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து  மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், போதைப் பொருட்களை ஆர்யன் கான்  நேரடியாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.

தொழிலதிபதி அர்பாஸுக்கும் ஆர்யன் கானுக்கு இடையே வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கு இடமான தகவல் எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்யன் கான் ஒரே கப்பலில் பயணம் செய்தார் என்பதற்காக அவரை போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு படுத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்