ஷோ த பீப்பிள் என்ற படநிறுவனத்தை தொடங்கிய ஆர்யா, தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்து பல வருடங்கள் ஆகிறது. படித்துறை என்ற படத்தையும் தயாரித்தார். பாலுமகேந்திராவின் முதன்மை சிஷ்யரான சுகா இயக்கிய அப்படம் இதுவரை வெளிவரவில்லை. இனி வெளிவருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை.
ஆர்யா மீண்டும் தனது தம்பி சத்யாவை ஹீரோவாக்கி அமரகாவியம் என்ற படத்தை தயாரித்தார். நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கினார். த்ரிஷா, நயன்தாரா, பூஜா போன்ற முன்னணி நடிகைகள் கலந்து கொள்ள பிரமாண்டமாக பாடல்களை வெளியிட்டனர். செப்டம்பர் 5 படம் வெளியாகிறது.