அரவிந்த்சாமியின் டியர் டாட்

வியாழன், 3 செப்டம்பர் 2015 (19:59 IST)
அடுத்து என்ன படம் பண்றீங்க? தனி ஒருவன் படம் பார்த்து அரவிந்த்சாமியை பாராட்டும் அனைவரும் கேட்கும் இரண்டாவது கேள்வி இது.
 

 
சொந்த தொழிலை கவனிக்க ஓடிவிடுவதால் அரவிந்த்சாமியை எளிதாக யாராலும் பிடிக்க முடிவதில்லை. தனி ஒருவன் எப்படியோ அமைந்த படம். வில்லன் கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக இருந்ததால் அவரே விரும்பி நடித்தது. ஆனால், அடுத்து அதேபோல் வில்லன் வேடம் ஏற்கப் போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.
 
வில்லன் மாதிரி அடுத்தப் படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
 
ஆனால், அந்த மாதிரி எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. அதேநேரம் டியர் டாட் என்ற இந்திப் படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தனி ஒருவன் மாதிரியே இதிலும் வித்தியாசமான வேடமாம்.
 
படம் எப்போங்க ரிலீஸ்?

வெப்துனியாவைப் படிக்கவும்