அரவிந்த்சாமி படத்தில் நந்திதா

புதன், 1 பிப்ரவரி 2017 (15:30 IST)
இயக்குனர் செல்வாவின் புதிய படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பிப்ரவரி 14 தொடங்குகிறது. நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நந்திதாவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் நந்திதா போலீசாக நடிப்பதாக தகவல்.
 
ஆக்ஷன் படமாக தயாராகும் இதில் தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில்  அரவிந்த்சாமியுடன் ரித்திகா சிங், சாந்தினி, நந்திதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே  இந்தப் படத்தின் இந்தி ரைட்ஸ் ரூ. 1.5 கோடிக்கு விற்பனையானது. அரவிந்தசாமி இந்தி ரசிகர்களுக்கு டியர் டாட் என்ற இந்தி  படத்தின் மூலம் பரீச்சயமானவர் தானே.

வெப்துனியாவைப் படிக்கவும்