தலைமுறை தலைமுறையாக ஆற்றங்கரையில் வசித்துவந்த குடும்பங்கள் நகரத்தின் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதன் உடனடி பாதிப்பை எதிர்கொள்கிறவர்கள் குழந்தைகள். நண்பர்கள், விளையாடும் இடம் முதற்கொணடு படித்துவரும் பள்ளியையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள். பெரியவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் வேறுவகை.