அஜீத் படத்தில் சொந்தக் குரலில் பேசும் அனுஷ்கா

சனி, 19 ஏப்ரல் 2014 (11:58 IST)
அனுஷ்காவின் தாய்மொழி கன்னடம். தமிழ் தெரிந்தாலும் சரளமாக பேச வராது. அதனால் அனுஷ்கா நடித்த தமிழ்ப் படங்களுக்கு டப்பிங் கலைஞர்கள்தான் இதுவரை குரல் கொடுத்து வந்தனர். முதல்முறையாக அனுஷ்காவே சொந்தக் குரலில் டப்பிங் பேசவிருக்கிறார்.
அஜீத் - கௌதம் படத்தில் அனுஷ்கா நாயகி. சில தினங்கள் முன் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனுஷ்காவுடன் இன்னொரு நடிகையும் நடிக்க உள்ளார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகாமலே உள்ளது.
 
இந்தப் படத்தில் அனுஷ்கா சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளதாக படயூனிட் தெரிவித்துள்ளது. தமிழில் அவர் டப்பிங் பேசுவது இது முதல்முறை என்பதால் பயற்சி எடுத்து வருவதாகவும் யூனிட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்