அஞ்சாதே இரண்டாம் பாகம் - மிஷ்கினே இயக்குகிறார்

திங்கள், 15 பிப்ரவரி 2016 (12:58 IST)
2008 -இல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம், அஞ்சாதே. நரேன், அஜ்மல், பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். பிரசன்னாவின் வில்லன் வேடம் படத்தில் பெரிதும் பேசப்பட்டது.


 
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த வருடம் இயக்கப் போவதாக மிஷ்கின் கூறியுள்ளார். அஞ்சாதேயை தயாரித்த ஹிதேஷ் ஜபக் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் குறித்து ஸ்கிரிப்ட் முழுமையடைந்ததும் தீர்மானிக்கவிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்