பேட்டி என்று போனாலே, ஒரேயடியாக புலம்பித் தள்ளுகிறார் அஞ்சலி. மாப்ள சிங்கம், இறைவி, தரமணி என்று வாழ்க்கை ஜோராக போகும் போது ஸ்பீடு பிரேக்காக ஏன் இந்த பற்கடிப்பு?
அஞ்சலி வெளிநாட்டு காதலரை ரகசிய திருமணம் செய்துவிட்டார், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று தொடர்ந்து எழுதுகிறார்களாம். ஐயா எனக்கு காதலும் இல்லை காதலனும் இல்லை திருமணமும் நடக்கலை குழந்தையும் பொறக்கலை என்று பேட்டிக்கு பேட்டி பல்லவி பாடுகிறார் அஞ்சலி. இருந்தும் சில இரும்பு மனம் கொண்டவர்கள் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளுகிறார்கள்.