அரண்மனைக்குப் பிறகு சுந்தர். சி இயக்கிவரும் படம்தான் ஆம்பள. 2015 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தீபாவளிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரியப்படுத்தியிருந்தனர். இதில் ஹன்சிகா ஹீரோயின். ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் நடிப்பதை சுந்தர். சி உறுதி செய்தார்.