நாங்கள் இருவரும் தவறான கதையில்: வருத்தத்தில் அமலாபால்!!

திங்கள், 30 ஜனவரி 2017 (14:24 IST)
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த கணவர் ஏ.எல். விஜய்யை அமலா பால் பிரிந்தார். அதன் பிறகு தற்போது படங்களில்  கவனம் செலுத்தி வருகிறார். 


 
 
இந்நிலையில், கணவரை பிரிந்ததை குறித்து உருக்கமாக பெசியுள்ளார். விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புறிந்துக்கொண்டேன்.
 
நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம் என நினைக்கிறேன். ஆனால், தற்போது நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். 
 
இரண்டு அழகான நபர்கள் தவறான கதையில் சந்தித்துக் கொண்டு இருவரின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலாபால் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்