30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டு தமிழில் நடிக்கும் அமலா ! யார் படத்தில் தெரியுமா?

வியாழன், 1 அக்டோபர் 2020 (22:22 IST)
இந்தியத் திரையுலகில் 80 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார்.

இவர் அக்காலத்தில் ரஜினி, கமல், மோகன் என பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர் ஆவார்.  அவர் கடைசியாக கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் அமலா தற்போது மீண்டும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ட்ரீம் வாரியம் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் ஷர்வாந்த் நாயகனாக நடிக்கிறார். இதில், ரிதுவர்மா நாயகியாக நடிக்கிறார.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அமலா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்