அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தந்த நிலையில் ஜுன் 7 திருமண நிச்சயதார்த்தம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி 7 -ம் தேதி மாலை ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் விஜய்யும், அமலா பாலும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நடிகர் விக்ரம், பொன்வண்ணன், நடிகை அனுஷ்கா, சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜீ.வி., அவரின் மனைவியும் பாடகியுமான சைந்தவி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.