யார் என்று தெரிகிறதா? இது யாரென்று புரிகிறதா ? - இருட்டு அறைக்குள் சர்ச்சை நடிகை!

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:40 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது
இருட்டு அறைக்குள் நின்று முகம் தெரியாமல் எடுத்துக்கொண்ட silhouette புகைப்படத்தை வெளியிட்டு நவராத்திரியின் இரண்டாவது நாளில், அங்குள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பு செய்தி உள்ளது.

அதாவது, இரண்டாவது நாளில், தேவி பிரம்மச்சாரினி முன்மொழியப்படுகிறார். தேவி பிரம்மச்சாரினி என்பது தேவி பார்வதியின் வடிவமாகும், அதில் அவர் சிவபெருமானைக் கொண்டுவருவதற்கு கடுமையான தண்டனையை மேற்கொண்டார் (அவளுக்குள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணிய அம்சத்தையும் முழுமையாகப் பாராட்டும் சக்திவாய்ந்த ஆண்பால் சக்தி). பிரம்மா என்றால் தெய்வீக மனப்பான்மை மற்றும் ஆச்சார் நடத்தை குறிக்கிறது. பிரம்மச்சாரியார் என்பது நடத்தை அல்லது தெய்வீக மனநிலையில் நிறுவப்பட்ட ஒரு செயல். இந்த நாள் குறிப்பாக தியானத்திற்கு புனிதமானது மற்றும் நீங்கள் உங்களுக்குள் உள்ள தெய்வத்தை ஆராயுங்கள் என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

On the second day of Navratri, I have a special message for all the women out there.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்