ரஜினி வழியில் அஜீத் - மீண்டும் திருப்பதியில் சாமி தரிசனம்

வியாழன், 29 ஜனவரி 2015 (09:28 IST)
படம் ஆரம்பிக்கும் முன்பும், படம் வெளியாவதற்கு முன்பும் திருப்பதி சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ரஜினி. அவரைப் போலவே வீரம் படம் வெளியானதும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து மொட்டையும் போட்டுக் கொண்டார் அஜீத்.
ஃபெப்ரவரி 5 என்னை அறிந்தால் திரைக்கு வரும் நிலையில், திருப்பதி சென்றார் அஜீத். அவரை திருப்பதி கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்த அஜீத், வழக்கம் போல உடனே கிளம்பிவிடாமல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, அவர்கள் தந்த பரிசுகளையும் ஏற்றுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்