கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு நாகார்ஜுன், ஐஸ்வர்யாராய், மகேஷ்பாபு ஆகியோர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் மணிரத்னம் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சி டேக் ஆஃப் ஆகவில்லை. அதற்குப் பதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார்.
இந்நிலையில் முதலில் பேசப்பட்ட நாகார்ஜுன், ஐஸ்வர்யாராய், மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாராய் மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தில் புதிதாக ஸ்ருதியும் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.