தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர், இணைச் செயலாளர்கள் ஆர்.தனபால், ஆர்.எஸ்.ராஜா, என்.ராதா, பி.ரமணபாபு ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தங்களுடைய அமைப்புகளின் ஆதரவை தெரிவித்தனர்.