சரி, விஷயத்துக்கு வருவோம். வசந்தபாலனின் காவியத்தலைவனில் வேதிகாதான் நாயகி. கே.பி.சுந்தராம்பாளை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். அதிலும் இழுத்திப் போர்த்தி கவர்ச்சிக்கு காலணா வாய்ப்பில்லாமல்தான் நடித்துள்ளார். வளரும் நடிகைக்கு யூரியா மாதிரிதான் கவர்ச்சியும். உரம் இல்லையேல் வளம் இல்லை.
கஸின்ஸ் என்ற மலையாளப் படத்தில் குஞ்சாகா போபனுடன் வேதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக சென்னையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். மலையாளப் படங்களில் பாடல் காட்சிக்கு வயலும் வரப்பும்தான் செட் பிராப்பர்ட்டி. அப்புறம் கேமரா, தெர்மோகோல், தேவைப்பட்டால் சில விளக்குகள். மாறாக இந்தப் பாடலுக்கு எண்பது லட்சங்கள் செலவளித்திருக்கிறார்கள். மிகக்குறைந்தது என்றால் வேதிகாவின் காஸ்ட்யூம்தான். ரொம்பவும் சிறிசாம்.