த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியணுக்கும், கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த திருமணம் நின்று போனது.
தற்போது அது குறித்து ஒரு சினிமா பட விழாவில் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா “நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் சினிமாவில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். திருமணத்திற்கு பிறகு நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. எனவே, தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் திருமணத்தை நிறுத்தினேன்.