சோதனைச்சாவடியில் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை (வீடியோ இணைப்பு)

திங்கள், 22 மே 2017 (18:15 IST)
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி சோதனைச் சாவடியில் ரகளையில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நல்ல விஷயத்துக்காக களத்தில் இறங்கிய நடிகை சுரபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


 
 
நடிகை சுரபி லட்சுமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து தனது காரில் திருச்சூர் சென்றார் அப்போது பள்ளியக்கரா சோதனைச்சாவடி அருகே அதிகமான வாகனங்கள் வரிசையாக நின்றது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.
 
அதன் பின்னர் காரில் இருந்து இறங்கி சோதனைச்சாவடி ஊழியர்களிடம் விரைவாக வாகன வசூல் செய்து போக்குவரத்தை சரி செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது சோதனை சாவடி ஊழியர்களுக்கும் நடிகை சுரபி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாகியுள்ளது.

 

 
 
அந்த மோதல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது காருக்கு அருகில் நின்ற காரில் ஒரு பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு வலியால் கதறிக்கொண்டு இருந்தார், அவருக்கு உதவி செய்வதற்காகவே அவ்வாறு தான் நடந்து கொண்டதாக நடிகை சுரபி லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவரது செயலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்