பேயாக வந்து மிரட்டப் போகிறாராம் சிம்ரன்

திங்கள், 14 டிசம்பர் 2015 (18:42 IST)
இப்போது எல்லா நடிகைகளும் பேய் படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டதால் நடிகர் சிம்ரனும் பேய் வேஷம் கட்ட தயாராகிவிட்டார்.


 

 
திருமணத்திற்கு பிறகு சரியான வாய்ப்பில்லாமல் இருந்த நடிகை சிம்ரன், தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் திரிஷா இல்லனா நயன்தாரா  படத்தில் நடித்தார். 
 
அடுத்ததாக அவரே தயாரித்து வரும் “கரையோரம்” என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு புதிய இயக்குனர் சிம்ரனிடம் ஒரு பேய் கதையை கூறியிருக்கிரார். அந்த கதை பிடித்துப் போகவே சிம்ரன், அந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம். 
 
அந்த பேய் படம் நடிகை நயன்தாரா நடித்த மாயா போன்ற கதையம்சம் உள்ள ஒரு படமாம். இதில் சிம்ரன் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க உள்ளார். இதில் கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உட்பல பலர் நடிக்கிறார்கள்.
 
சிம்ரன் பேயாய் வந்து பயமுறுத்துவாரா இல்லை பேயை பார்த்து பயப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்