ஏற்கனவே, நடிகர் சித்தார்த்துடன் நடிகை சமந்தாவுக்கு காதல் என கிசுகிசு கிளம்பியது. மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இளம் கதாநாயகன் அழகில் நடிகை சமந்தா மயங்கி, அவரையே கரம்பிடிக்க முடிவு செய்துவிட்டாராம். அந்த அதிர்ஷ்டகார நபர் யார் என தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.
இதை கண்டுபிடிக்க ஒரு பட்டாளமே களத்தில் இறங்கியது. முடிவு, அது நடிகர் நாகசைதன்யா என தெரிய வந்துள்ளது. இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது கூடுதல் தகவல்.
தமிழில் பட்டையைக் கிளம்பிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்தபோது நடிகர் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆக, நடிகை சமந்தா பொண்ணுக்கு விரைவில் டும்...டும்...!