விலங்குகளின் நலனில் நடிகைகள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். முன்னாள் நடிகை அமலா, இந்நாள் நடிகைகள் த்ரிஷா, ப்ரியாமணி என்று பலரும் மிருகங்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.
த்ரிஷாவுக்கு நாய் என்றால் ப்ரியாமணிக்கு புலி. விலங்குகள் பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுகிற இவர், கண்காட்சிகளிலும், மிருகக்காட்சி சாலைகளிலும் புலிகளை கூண்டில் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.