மோசமான நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்… நடிகை அஞ்சலி தடாலடி பதில்!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:37 IST)
ஆந்திராவை சேர்ந்த நடிகை நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கத் தொடங்கி சினிமா வாய்ப்புகளை பெற்றார். அதையடுத்து கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் , அங்காடித்தெரு ,  எங்கேயும் எப்போதும், மங்காத்தா, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 

இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது ஜெய் மீது காதலில் விழுந்து தொடர்ந்து பல வருடம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டனர். அவரால் தான் தன் வாழ்க்கையே நாசமாக போச்சு என்றும் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கவேண்டாம் என கூறி கூறி கெடுத்ததாக மனம் வருந்தினார். 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் மோசமான ஒரு நபரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.  ஒருகட்டத்தில் அந்த உறவில் நடந்த மோசமான விசயங்களை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அந்த நபரிடம் இருந்து பிரிந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார். இந்த நேர்காணலில் அவர் ஜெய பெயரை சொல்லவில்லை என்றாலும், அவரைதான் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார் என்ற ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்