சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி ஒன்றில் 'வாணி ராணி' தொடரில் நடித்து வரும் நடிகை சபிதாராய் அந்த தொடரின் மேனேஜருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்ததாகவும், நள்ளிரவில் அவருடைய வீட்டில் அடிதடியில் இறங்கியதாகவும் செய்தி வெளியாகியது.
இந்த செய்தி ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களிலும் வெகுவேகமாக பரவியது. இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே சபீதா விளக்கம் அளித்த நிலையில் தற்போது ஃபேஸ்புக்கில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த சம்பவம் நடந்தது உண்மைதான், அந்த வீடியோவில் இருப்பதும் நான் தான். ஆனால் அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்த காரணம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் கடனாக கொடுத்திருந்த பணத்தை கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றேன். அந்த வீடியோவை எடுத்த சேனல்காரர்களோ அல்லது வேறு யாரோ அதை தவறாக சித்தரித்து விட்டாரக்ள்.