அனைவரின் முன்னிலையில் மீரா ஜாஸ்மீனை மன்னிப்பு கேட்ட வைத்த கமல்

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:28 IST)
அனைவரின் முன்னிலையில் மீரா ஜாஸ்மீனை,  உடை வடிவமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் மலையாள பிரபல இயக்குனர் கமல். 


 

 

 
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நடிகை மீரா ஜாஸ்மீன் குறித்து அடிக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் மலையாள இயக்குனர் கமல். இவரது இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மீன்,  இவரது நடிவடிக்கைகள் எப்போதும் மிகவும் மோசமாக தான் இருக்கும் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒரு முறை தன்னுடைய இயக்கத்தில் கிராமபோன் என்கிற படத்தில் மீரா ஜாஸ்மீன் நடித்த போது அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு உடையை சரியில்லை என்று கோரி மட்டமாக விமர்சித்தாராம். இந்த படத்தின் உடை வடிவமைப்பாளர் தேசிய விருதுபெற்றவர். ஆனால் சில அற்ப காரணத்திற்காக அவரை அவமானப்படுத்தியுள்ளார்.  இதனால் செட்டில் அனைவரின் முன்னிலையில் மீரா ஜாஸ்மீனை,  உடை வடிவமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் இயக்குனர் கமல் 

மேலும், தனது இயக்கத்தில் மின்னாரக்கூட்டம் படத்தில் அவர் கொடுத்த டார்ச்சர்களை தாங்க முடியாமல் இனி ஒருபோதும் மீரா ஜாஸ்மினை வைத்து படம் இயக்கமாட்டேன் என்று அந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் அனைவர் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார்.தான் பார்த்த நடிகைகளிலேயே மிகவும் மோசமான மனிதர்களை மதிக்காத நடிகை மீரா ஜாஸ்மின் தான்  என்று கடுமையாக சாடியுள்ளார் இயக்குனர் கமல்

வெப்துனியாவைப் படிக்கவும்