தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தினம் தோறும் இரு அணியினரும் பல நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்புமனுவை, நடிகர் விஷால் இன்று வாபஸ் பெற்றார். விஷால் தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தலைவர் பதவிக்கு நாசரின் மனு ஏற்கப்பட்டதால் விஷால் தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
அப்போது, செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ”சரத்குமார் அணியினருடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.