விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். விமலுக்கு இணையாக படத்தில் வருகிறார் சமுத்திரக்கனி. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரி Babie Handa - வை ஒரு பாடலுக்கு ஆட வைத்து படத்தின் கிளாமரை மெருகேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல படத்தின் மைக்கருத்தும், நாம் சொல்ல வந்த விஷயமும்.
இன்று பணத்துக்காக கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு மையமாக அமைந்தது சென்னை என்பது நாகேந்திரன் ஆராய்ந்து கண்டிருக்கும் உண்மை. 20 வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற கொலைகள் பெரும்பாலும் நட்புக்காக நடத்தப்பட்டதாகவே இருக்கும். நெல்லையில் நடந்த கொலைகள் பெரும்பாலும் சாதி மோதல்களின் விளைவு. கோயம்புத்தூரில் வியாபாரத்துக்காக நடத்தப்பட்டவை. கடலூர், விழுப்புரத்தில் அரசியலுக்காக நடத்தப்பட்ட கொலைகளே அதிகம். சென்னையில் நடந்த கொலைகள் பெரும்பாலும் பணத்துக்காக நடந்தவை.