நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு !

வியாழன், 15 ஜூலை 2021 (22:45 IST)
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுநாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றும் பல்வேறு மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகிறது. மேலும் மனம் வருத்தம் அளிக்கும் கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது என நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்