சுதீப் நடிப்பில் தமிழ் தெலுங்கில் தயாராகும் படம் - கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்

புதன், 20 மே 2015 (15:21 IST)
தமிழில் நாயகனாக நிலைபெற வேண்டும் என்பது சுதீப்பின் நீண்டநாள் ஆசை. அதற்காக தொடர்ந்து தமிழ்ப்பட இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார்.
சில வருடங்கள் முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடிப்பதாக முடிவானது. அந்த நேரம் லிங்கா படத்தை இயக்கும் பொறுப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு தரப்பட, சுதீப் நடிப்பதாக இருந்த தமிழ்ப் படம் தள்ளிப் போனது. 
 
தற்போது இருவருடைய கமிட்மெண்ட்களும் முடிந்துவிட்டன. அதனால் ஜுன் 12 படத்தை தொடங்குகிறார்கள். பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சில வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுக்கின்றனர்.
 
சூரப்பா பாபு படத்தை தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்