உலக மக்களால் நேசிக்கப்பட்ட மகான் - அப்துல்கலாமுக்கு சிவகுமார் புகழஞ்சலி

புதன், 29 ஜூலை 2015 (11:05 IST)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
 
உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு, நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும், எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர், அப்துல்கலாம்.

பதவியில் இருந்தபோதும், பதவியில் இல்லாதபோதும், உலக மக்களால் ஒன்று போல் நேசிக்கப்பட்ட மகான். இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த அற்புத மனிதர் என அதில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்