வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பெருமை சேர்த்த சாந்தனு - கீர்த்தி ...!

செவ்வாய், 19 மே 2020 (08:13 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் அவருக்கு மாணவராக நடித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சந்தனு மற்றும் மனைவி கிகி இணைந்து கொஞ்சம் Corona Naraiyya காதல் என்ற குறும்படத்தை இயக்கி நடித்துள்ளனர். சமீபத்தில் தான் அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், மனைவி கீர்த்தி மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தி வெளியிட்டு, " கேமரா பெண் யார் என்று யோசிக்கும் அனைவருக்கும் ... எங்க குறும்படத்தின் கேமரா வுமன் இவர்தான். யுவஶ்ரீ எங்கள் வீட்டில் தங்கியிருந்து பணிப்பெண்ணாக வேலை பார்ப்பவர். நமக்கு தெரியாத, பல திறமைகள் இவருக்குள் இருக்கிறது. அதை நாம் சரியாக அடையாளம் காணவேண்டும்'' என அவரது திறமையை பாராட்டி பணிப்பெண்ணிற்கு கொடுத்துள்ள மரியாதையை எண்ணி அனைவரும் சாந்தனு - கீர்த்தி ஜோடியை பாராட்டியுள்ளனர்.

For all those wondering who the camera’woman is...
She’s #Yuvashree She’s our
“live-in”maid

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்