வருகின்ற 18 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எப்பொழுதும் இல்லாத வகையில் தற்போதைய நடிகர் சங்க தேர்தல், சரத்குமார், விஷால் அணியினர் என்று இரு பிரிவாக பிரிந்து பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், விஷால் அணியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாடக நடிகர்களை சந்தித்து, பிரச்சரம் செய்துவருகின்றனர். இந்நிலையில் சரத்குமார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளார்.