நடிகர் சரத்பாபு குறித்த செய்திக்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு

புதன், 3 மே 2023 (21:54 IST)
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நடிகர் சரத்பாபு இன்று காலமானதாக வெளியான செய்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

நடிகர் சரத்பாபு  கடந்த 1973 ஆம் ஆண்டு  தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சரத்பாபு அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு தீவிர சிகிசை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள்  தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பான நிலையில், இச்செய்திகளை  நடிகர் சரத்பாபு குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

மேலும், நடிகர் சரத்பாபு உடல் நலம் தேறிவருவதாக  அவரது குடும்பத்தினர் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளனர்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்