அதன் பின் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகர்களை வைத்து அவர் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. கடந்த டிசம்பர் மாதமே அதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துல்கர் சல்மான் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கால்ஷீட் விஷயங்களில் சொதப்பியதால் அந்த படமும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், புதிய செய்தியாக, பிரேமம் எனும் மலையாளப்படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள இளசுகளின் மனதை கொள்ளையடித்த நடிகை சாய் பல்லவி மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த அவர், இயக்குனர் மணிரத்னம் அழைத்ததும் ஓகே சொல்லிவிட்டாராம். வருகிற ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும், விரைவில் அந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.