நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், அதனை மூடி மறைக்கவே சரத்குமாரும், ராதாரவியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும் எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டினார்.
"நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரைமுறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர்.