பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாகுபலி-2 உலக அளவில் ரூ.1700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமடைந்து விட்டார் பிரபாஸ். எனவே, அவரை நேரிடையான இந்தி படத்தில் நடிக்க வைக்க பலர் முயன்று வருகின்றனர். ஆனால், அதில் ஆர்வமில்லாமல் பிரபாஸ் ஒதுங்கியே இருந்தார். தற்போது அவர் சஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பாகுபலி2 படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பிரபாஸை வைத்து நேரிடையான பாலிவுட் படத்தை எடுக்க விரும்பினார். அதற்கு ஒருவழியாக தற்போது பிரபாஸ் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.