மும்பை வெள்ளத்தில் சிக்கிய மாதவன்

புதன், 30 ஆகஸ்ட் 2017 (13:25 IST)
மும்பையில் கனத்த மழை பெய்து வருவதால், மாதவனின் கார் வெள்ளத்தில் சிக்கியது.



 
மும்பையில் நேற்றில் இருந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாதவன் கார், அவர் அபார்ட்மெண்டுக்கு வெளியில் ஆன் ஆகாமல் அப்படியே முடங்கிவிட்டது. இதனால், காரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் வெள்ளத்தில் நடந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்