எம்.ஆர்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படத்தின் 2–ம் பாகத்தை சினிமாவாக தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் சதீஷ், நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோருடன் வெளியில் சென்றார்.
குன்றத்தூர், பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள பங்களாவுக்கு படப்பிடிப்புக்கான இடத்தை பார்வையிட சென்றார். மாலை 4 மணி அளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார். மாலை 6 மணி வரை நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தார்.
அப்போது சதீசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் சதீஷை காப்பாற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக மாங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சதீஷின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.