நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…ரசிகர்கள் அதிர்ச்சி

திங்கள், 5 ஏப்ரல் 2021 (21:54 IST)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.

.இந்நிலையில் சமீபதித்தில் பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்குத் தொகுதியில் மக்களிடம் வாக்குகள் சேகரித்தார் நடிகர் கார்த்திக்.  பிறகு திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீட்டிற்குச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்