இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் டி.பிளாக்கில் வசித்து வரும் விஷால் இதுபற்றி அண்ணாநகர் போலீசில் தனது மானேஜர் மூலமாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும்; அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.