அசோக் ஷெல்வனுடன் நடிக்கும் ப்ரியா ஆனந்த்

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (13:20 IST)
பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தில் வசனம் எழுதியவர், ஞானவேல். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், கூட்டத்தில் ஒருவன்.
 

 
இந்தப் படத்தில் பீட்சா 2 வில்லா, தெகிடி படங்களில் ஹீரோவாக நடித்த அசோக் ஷெல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ப்ரியா ஆனந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
 
ரொமான்டிக் படமாக கூட்டத்தில் ஒருவன் தயாராகிறது. இந்தப் படம் தவிர, சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களிலும் அசோக் ஷெல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்