நானும் ரவுடிதான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மரகதநாணயம் படமும் ஹிட் ஆகியுள்ளது. இதிலும் இவர் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார்.
இந்நிலையில் பார்ப்பதற்கு இன்னமும் இளமையாகவே இருக்கிற ஆனந்தராஜ் அது பற்றிய ரகசியத்தை செய்தியாளர்களிடம் பகிருந்து கொண்ட போது “ 30 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை மது மற்றும் சிகரெட்டை தொட்டதில்லை. அதுதான் காரணம். இப்போது இளம் நடிகர்களோடு நடித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்களுக்கு நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என அவர் கூறினார்.