ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்தாலும் மன்றங்கள் பெயரில் ரசிகர்கள் ஒன்றுகூடியபடியேதான் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பரிமாற்றங்களை ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் தொடங்கிவிட்டனர். வழக்கமான தோரணம் கட்டுதல், பேனர் வைத்தல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற சமூக செயல்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆங்காங்கே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடத்தப்படலாம்.
இவை தவிர ஆன்மீக ரசிகர்கள் சார்பில் அர்ச்சனை, அன்னதானம், அலகு குத்துதல் ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் ரத்ததான முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் வெளியிடவும், மங்காத்தா போன்ற ஹிட் படங்களை மீண்டும் திரையிடவும் திரையரங்குகள் முன்வந்துள்ளன. ஊரே கொண்டாடும் போது தொலைக்காட்சிகள் மட்டும் சும்மா விடுமா.