ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்தது கிராமத்து வேடம். தாவணிக்குதான் அவர் சரி என்று திரையுலகம் நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியாவது அந்த இமேஜிலிருந்து வெளியேற துடித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.
அந்த நேரத்தில் திருடன் போலீஸ் பட வாய்ப்பு வந்தது. அது நகரத்து சப்ஜெக்ட். கல்லுnரி மாணவி வேடம். அந்த ஒரே காரணத்துக்காக உடனே திருடன் போலீஸில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார். படத்தில் இவர் இன்ஸ்பெக்டரின் மகளாக வருகிறார். இவரை காதலிப்பது திருடனான தினேஷ். ஐஸ்வர்யா ஒரு முழுநீள காமெடிப் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.