விபத்து நேர்ந்தது எனக்கல்ல - நடிகர் அதர்வா விளக்கம்

செவ்வாய், 3 மார்ச் 2015 (14:51 IST)
இசிஆர் பகுதியில் நடிகர் அதர்வா விபத்தில் சிக்கிக் கொண்டதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு.
 
விபத்து நடந்தது படப்பிடிப்பிலா இல்லை அவர் நண்பர்களுடன் வெளியே சென்ற போதா? விசாரித்தபோது விபத்து என்பதே தவறான தகவல் என தெரியவந்தது. அதர்வாவே என்ன நடந்தது என்கிறார், கேட்போம்.
 
என்னுடைய நலம் விரும்பிகளிடமிருந்து போன் மேல் போன். என்னாச்சு என்று. உண்மையில் விபத்தில் சிக்கியது என்னுடைய ப்ரெண்ட். அவனை நானும் சில ப்ரெண்ட்ஸும் சேர்ந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தோம். அதைதான், நான் விபத்தில் சிக்கியதாக நினைத்துவிதிடார்கள். நான் நன்றாகதான் இருக்கேன். விபத்தில் சிக்கிய என்னுடைய ப்ரெண்டுக்கு சின்ன ஹேர்லைன் பிராக்சர். அவனும் நன்றாக இருக்கிறான் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்