நகைச்சுவை படத்தில் நடிக்கும் அதர்வா

செவ்வாய், 3 மார்ச் 2015 (16:44 IST)
பயமுறுத்துகிற பேய் படங்களையும் சிரிக்கச் சிரிக்க சொன்னால்தான் பார்க்கிறார்கள். பேய்க்கே காமெடி பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கையில் மற்றவர்களைப் பற்றி கூற வேண்டியதில்லை.
 
படத்தில் கதை இருக்கா என்று பார்ப்பதைவிட காமெடி இருக்கா என்றுதான் தயாரிப்பாளர்களும் கேட்கிறார்கள். நடிகர்களும் அதற்கேற்ப தங்களின் சுக்கானை திருப்புகிறார்கள்.
 
அதர்வா நடித்த பாணா காத்தாடியில் கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. அதன் பிறகு நடித்ததெல்லாம் சீரியஸ் கதைகள். விரைவில் வெளிவரவிரக்கும் சண்டி வீரனும் சீரியஸ் படம்தான்.
 
சண்டி வீரனுக்குப் பிறகு நகைச்சுவை படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் அதர்வா. இன்னும் சில தினங்களில், அது என்ன படம், யார் இயக்குகிறார்கள் என்ற விவரத்தை அவரே வெளியிட இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்