அச்சுதானந்தன் கேரள கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவர். கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசால் வேட்டையாடப்பட்ட காலத்தில் போலீஸின் கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டவர். மலையாள சேனல்களில் இவரைப் போல் வேடமணிந்த மிமிக்ரி கலைஞர்கள், அச்சுதானந்தனை அச்சு மாமா என்ற பெயரில் கலாய்ப்பது உண்டு. அச்சுதானந்தன் போல் பேசி நடிக்க மட்டும் கேரளாவில் இரண்டு டஜன் மிமிக்ரிக்காரர்கள் இருக்கிறார்கள்.